Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓய்வுபெற்ற அரசு பஸ் டிரைவர் தற்கொலை

கிருஷ்ணகிரி, ஆக.9: வேப்பனஹள்ளி அடுத்த யானைக்கால் தொட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(63). இவர், அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால் குணமாகவில்லை. இதனால் மனவேதனையில் இருந்தவர் கடந்த 6ம் தேதி வீட்டில் விஷத்தை குடித்து விட்டு மயங்கினார். அவரை குடும்பத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி, நேற்று முன்தினம் சுப்பிரமணி உயிரிழந்தார். இதுபற்றி வேப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.