Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

டூவீலரில் இருந்து தவறி விழுந்து காவலாளி பலி

கிருஷ்ணகிரி, ஆக.5: திருவண்ணாமலை மாவட்டம், பசும்போரை கிராமத்தை சேர்ந்தவர் பழனி (61). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே மல்லேப்பாளையம் பகுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணகிரி கெலமங்கலம் சாலை, மல்லேப்பாளையம் பகுதியில் அவர் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக டூவீலரில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, கெலமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுபற்றி கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.