Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டூவீலரில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி

கிருஷ்ணகிரி, நவ.1: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே மரவாரனப்பள்ளியை சேர்ந்தவர் முத்தப்பா(65), கூலி தொழிலாளி. இவர் கடந்த 22ம் தேதி டூவீலரில் காசிரிகானப்பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக டூவீலரில் இருந்து தவறி கீழே விழுந்தார். அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி முத்தப்பா நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.