ஓசூர், ஜூன் 20: தென்பெண்ணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து குறைவதும், உயர்வதுமாக இருக்கும். இந்நிலையில், கடந்த வாரம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, அணைக்கு விநாடிக்கு 981 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. தொடர்ந்து மழை இல்லாததால், அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக குறையத்தொடங்கியது. நேற்று முன்தினம், விநாடிக்கு 741 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 501 கன அடியானது. அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 40.67 அடியாக உள்ளது.
+
Advertisement


