Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

சிறுமுகை அருகே பூப்பறிக்க சென்ற பெண் விஷ பாம்பு கடித்ததில் உயிரிழப்பு

மேட்டுப்பாளையம், நவ.22: சிறுமுகை அருகே உள்ள ஜடையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாந்தாமணி (67). இவரது கணவர் கந்தசாமி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.இ தனால் தனியே வசித்து வந்த சாந்தாமணி விவசாய கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் நேற்று வீட்டின் அருகே இருந்த தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் பூப்பறிக்க சென்றுள்ளார். அப்போது, அங்கு புதரில் மறைந்து இருந்த விஷ பாம்பு கடித்ததில் அவர் வலியில் அலறி துடித்துள்ளார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.