மேட்டுப்பாளையம், அக்.14: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சமயபுரம் தடுப்பணை பகுதியில் நேற்று ஆண் சடலம் தண்ணீரில் மிதந்த படி இருப்பதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உதவியுடன் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமனன் தலைமையிலான போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? தற்கொலையா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+
Advertisement