கோவை,அக்.13: கோவை நஞ்சப்பா ரோடு பார்க்கேட் அருகே நேற்று வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து கோவை காந்திபுரம் நோக்கி வந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக வாலிபர் மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபர் யார்? எந்த ஊர் என்பன போன்ற விவரம் உடனடியாக தெரியவரவில்லை. இது குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.