கோவை, செப்.11 : கோவை மாநகராட்சியில் நிர்வாக நலன் கருதி உதவி ஆணையர்கள் இருவரை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதன்படி மத்திய மண்டல உதவி ஆணையராக இருந்த சீ.செந்தில்குமரனை வடக்கு மண்டல உதவி ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல கிழக்கு மண்டல உதவி ஆணையராக இருந்த க.முத்துசாமிக்கு கூடுதல் பொறுப்பாக வடக்கு மண்டலத்திற்கு பதிலாக மத்திய மண்டலம் வழங்கப்பட்டுள்ளது.
+
Advertisement