Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சாலையோரம் எரிக்கப்படும் குப்பைகள்

கரூர், ஆக. 21: கரூர் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் குப்பைகள் சாலையோரம் எரிக்கப்படுவது தடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், சில பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அந்தந்த பகுதிகளின் சாலையோரத்தில் கொட்டி பின்னர் எரிக்கப்பட்டு வருகிறது.

முக்கிய சாலைப்பகுதிகளில் குப்பைகள் தீயிட்டு எரிக்கப்படுவதால் ஏற்படும் புகையின் காரணமாக விபத்துக்களும் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் கரூர் மாவட்ட பகுதிகளில் பரவலாக நடைபெற்று வருகிறது. எனவே, இது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.