Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாங்கல் அருகே 60 கிராம் குட்கா பொருட்கள் பறிமுதல்

கரூர், செப், 18: கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசார்களும், மதுவிலக்கு போலீசார்களும் கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை மேற்கொண்டு வழக்கு பதிந்து வருகின்றனர்.மேலும், மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக தனிப்படைகளும் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்துள்ள செவந்திபாளையம் ஆற்றுப்படுகையை ஒட்டி குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வாங்கல் போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சோதனை மேற்கொண்டு, அந்த கடையில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்றதாக இதே பகுதியை சேர்ந்த அஜித் என்பவர் மீது வழக்கு பதிந்து, அந்த நபரிடம் இருந்து 60 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.