Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்

கரூர், அக். 17: தமிழகம் முழுதும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டில் விளைவு குறித்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள் சார்பில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. டாஸ்மாக் பாரில் ஆரம்பித்து, சிறிய பெட்டிக்கடை, மீன், சிக்கன் கடை போன்ற அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது.

பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் அனைத்தும் தெருக்களில் வீசி செல்வதால், காற்று காரணமாக பல்வேறு பகுதிகளில் இடம் பெயர்ந்து மண்ணில் மக்கி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு, ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் பிளாஸ்டிக் பொருட்களில் ஒட்டியுள்ள உணவுகளை சாப்பிடும் போது, பிளாஸ்டிக்கும் சென்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே, பிளாஸ்டிக் பயன்பாட்டை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.