Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோயிலுக்கு சென்ற முதியவர் சாலை விபத்தில் பலி

அரவக்குறிச்சி, செப்.11: திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள தும்மலக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் சீரங்கன் (70). இவர் அரவக்குறிச்சி அருகே உள்ள புங்கம்பாடியை அடுத்த வடகம்பாடி கிராமத்தில் உள்ள தனது குலதெய்வ கோயிலுக்கு சென்று விட்டு, அரவக்குறிச்சி அருகே உள்ள குமரண்டான்வலசு பகுதியில் உள்ள தனது மகன் ரங்கன் வீட்டிற்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

காசி விஸ்வநாதர்கோவில் அருகே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, ஸ்ரீரங்கன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவரை அருகிலிருந்த்வர்கள் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்து ஸ்ரீரங்கன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.