Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பெட்டி, டீக்கடையில் குட்கா விற்ற 3 பேர் கைது

கரூர், ஜூலை. 5: கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசார்களும், மதுவிலக்கு போலீசார்களும் கடந்த சில மாதங்களாக தீவிரசோதனை மேற்கொண்டு வழக்கு பதிந்து வருகின்றனர். மேலும், மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக தனிப்படைகளும் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், நேற்று முன்தினம், வெங்கமேடு, கரூர் டவுன், வேலாயுதம்பாளையம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டீக்கடை மற்றும் மளிகை கடைகளில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்றதாக அந்தந்த பகுதிகளை சேர்ந்த ராமன், சக்திவேல், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். அவர்களிடம் இருந்து 300 எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.