Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நித்திரவிளை அருகே தடுமாறி விழுந்த மீனவர் சாவு

நித்திரவிளை, செப்.10: நித்திரவிளை அருகே பூத்துறை காருண்யபுரம் பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ் (65). மீன்பிடி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் நித்திரவிளை - சின்னத்துறை ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப் போது, நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பின் தலையில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வர்கீசை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது சம்பந்தமாக வர்கீஸ் மகள் பிரின்சி நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.