Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெற்றோரை திட்டியதை கண்டித்த மகன் மீது தாக்குதல் ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை

சோழிங்கநல்லூர், அக்.25: வியாசர்பாடி மேயர் கிருஷ்ணமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சுதர்சன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது பெற்றோர் இந்திரகுமார், வள்ளி ஆகியோர் கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி இரவு வீட்டு வாசலில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் இருதயநாதன் (28) சுதர்சனின் பெற்றோரிடம், தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை பார்த்த சுதர்சன், தன் பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்ட இருதயநாதனை தடுத்துள்ளார். அப்போது அருகில் கிடந்த அடுப்பெறிக்க பயன்படுத்தும் கட்டையால் சுதர்சனின் தலையில் இருதயநாதன் தாக்கி உள்ளார். இதில், படுகாயமடைந்த சுதர்சன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் வியாசர்பாடி போலீசார், இருதயநாதன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. போலீசார் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.ரவிக்குமார் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, இருதயநாதன் மீதான கொலை முயற்சி, ஆபாசமாக திட்டியது ஆகிய குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.