Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காஞ்சிபுரத்தில் இன்று விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்: கலெக்டர் கலைச்செல்விமோகன் தகவல்

காஞ்சிபுரம், செப்.19: காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் இன்று நடக்கிறது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் இந்த மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் இன்று (19ம்தேதி) காலை 10.30 மணியளவில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடக்கிறது.

கூட்டத்தில், வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்களும், அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்துகொண்டு, வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். ஆகவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு, வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். மேலும், நுண்ணீர் பாசனம் திட்டத்தில் பயனடைவதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. எனவே, இத்திட்டத்தில் விவசாயிகள் பயனடைவதற்கு சிட்டா, ஆதார் அட்டை, நீர் பரிசோதனை அறிக்கை, நில வரைபடம், விவசாயி புகைப்படம் மற்றும் அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.