Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு பள்ளியில் திடீர் தீ விபத்து

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த, சாலவாக்கம் கிராமத்தில் அரசினர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சாலவாக்கம் கிராமத்தை சேர்ந்த 123 மாணவ-மாணவியர்கள் பயின்று வருகின்றனர். பள்ளி அருகே சமையற் கூடம் உள்ளது. பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் உணவுகள் சமைப்பது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் மாணவர்களுக்கு உணவு சமைக்கும் பணியில் சமையலர் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, திடீரென சிலிண்டரில் எரிவாயு கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றி எரியத் துவங்கியது. இதைகண்ட சமையலர் அறையிலிருந்து வெளியேறி சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில், சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களின் உதவியோடு தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சமையல் அறையில் இருந்த உணவு பொருட்கள் எரிந்து சேதமானது. மேலும், இச்சம்பவம் குறித்து சாலவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

*இ-சேவை மைய ஊழியர் திடீர் மரணம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த, மையத்தில் காஞ்சிபுரத்தை அடுத்த நசரத்பேட்டை பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் ஸ்டாலின்குமார் (43) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், நேற்று வழக்கம்போல காலையில் வேலைக்கு வந்துள்ளார். சுமார் 11 மணியளவில் பணியில் இருக்கும்போது ஸ்டாலின்குமார் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அங்கிருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.