Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் காதல் தோல்வியால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திருவாரூர் அருகே குடவாசல், தேதியூர் கிரமத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் மகன் மாரியப்பன் (23). இவர், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தங்கி வல்லம் - வடகால் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், மாரியப்பன் சம்பவத்தன்று இரவு வீட்டின் அருகே உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டு இறந்து கிடந்தார். இதனைகண்ட அப்பகுதி மக்கள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், மாரியப்பனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காதல் தோல்வியால் விரக்தியடைந்த மாரியப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதும், இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.