Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரம்பலூரில் 25ம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்: ஆர்வமுடன் பார்வையிட்ட பொதுமக்கள்

பெரம்பலூர்,ஜூலை 23: பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் 25 ம்தேதி நடைபெற உள்ளது- மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் தகவல். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் 25 ம்தேதி வெள்ளிக் கிழமை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடு பொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத் திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் அன்றைய தினம் நடை பெறும் கூட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தேவைகள் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.