Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

தர்மபுரி, நவ.13: தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பாலவாடி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன்(61). விவசாயியான இவர், தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே முட்புதர்களை அகற்றிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக கால் தவறி அங்குள்ள கிணற்றில் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் அவரை தேடிப்பார்த்தபோது கிணற்றில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. தகவலின்பேரில், பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடம் சென்று, மனோகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இறந்த மனோகரனுக்கு அலமேலு என்ற மனைவியும், 1 மகன், 1 மகளும் உள்ளனர்.