ஈரோடு, நவ.13: கோபி அடுத்த மொடச்சூர் வாரச்சந்தையில் நேற்று முன்தினம் 60 வயது மதிக்கதக்க மூதாட்டி சடலம் கிடப்பதாக, மொடச்சூர் விஏஓ சுரேஷிற்கு, அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில், அங்கு வந்த சுரேஷ், கோபி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இறந்துக்கிடந்த மூதாட்டி எந்த ஊரைச் சேர்ந்தவர்? தற்கொலையா? இயற்கை மரணமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
