ஈரோடு, அக். 8: ஈரோடு ரங்கம்பாளையம் இரணியன் வீதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (45). இவருக்கு கவிதா என்ற மனைவியும், இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பிரியதர்ஷினி (20). இவர், பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஜெய்சங்கர் மதுப்பழக்கம் உள்ளது. கடந்த 1ம் தேதி ஜெய்சங்கர் வீட்டிற்கு மது குடித்து வந்ததால், அவரை பிரியதர்ஷினி கண்டித்துள்ளார். இதனால், ஜெய்சங்கர், பிரியதர்ஷினியுடன் பேசாமல் இருந்துள்ளார்.
இதில், மனவேதனை அடைந்த பிரியதர்ஷினி கடந்த 5ம் தேதி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் பிரியதர்ஷினியை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு பிரியதர்ஷினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.