ஈரோடு, அக். 7: ஈரோடு பூந்துறை கனகபுரம் பேராளிமேடு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (27). தொழிலாளி. இவரது மனைவி பாரதி. சங்கருக்கும், பாரதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சங்கர் கடந்த நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் இருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் ஆம்புலன்சு மூலம் சங்கரை மீட்டு வெள்ளோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement