Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓடையில் தவறி விழுந்து முதியவர் பலி

தர்மபுரி, டிச.5: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (70). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 29ம்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் பின்னர் அவர் வீடு திரும்பவில்ைல. இதனால் குடும்பத்தினர் அவரை தேடி வந்தனர். நேற்று முன்தினம், வீட்டின் அருகே உள்ள ஓடையில் லட்சுமணன் சடலமாக கிடந்தார். அவர் ஓடையில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்த தகவலின் பேரில், கோட்டப்பட்டி போலீசார், அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.