திண்டுக்கல், அக்.7:திண்டுக்கல் தாலுகா காவல்நிலைய எஸ்ஐ அங்கமுத்து, சிறப்பு எஸ்ஐ கருப்பையா, ஏட்டு சரவணன் மற்றும் போலீசார் வத்தலக்குண்டு பைபாஸ் சாலை பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, பொன்மாந்துறை கட்ரோடு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த கும்பலை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் குடைபாறைபட்டியை சேர்ந்த முகமது அலி ஜின்னா (30), பாதாள காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார் (25), வெயிலடிச்சான்பட்டியைச் சேர்ந்த சரவணக்குமார் (37), கோபால் நகரை சேர்ந்த ஜெயத்ரட்சகன் (27), அனுமந்தநகரை சேர்ந்த விஸ்வா (23) ஆகியோர் என்பதும், இவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா, கார் மற்றும் இரண்டு டூவீலர்களை பறிமுதல் செய்தனர். கைதானவர்களில் முகமது அலி ஜின்னா, ரஞ்சித்குமார், ஜெயத்ரட்சகன் ஆகியோர் மீது திண்டுக்கல், கோவை, திருப்பூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் அடிதடி, திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளது.