Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குஜிலியம்பாறையில் டிப்பர் லாரி மோதி விவசாயி பலி டிரைவர் மீது வழக்கு பதிவு

குஜிலியம்பாறை, செப்.16: குஜிலியம்பாறையில், டூவீலர் மீது டிப்பர் லாரி மோதியதில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து டிரைவர் மீது போலீசார், வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

குஜிலியம்பாறை அருகே காட்டமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ்(55). விவசாயி. இவர் நேற்று மதியம் தனது டூவீலரில், குஜிலியம்பாறை மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றுள்ளார். குஜிலியம்பாறை யூனியன் ஆபிஸ் சாலையைக் கடந்து சென்ற போது, பின்னால் வந்த டிப்பர் லாரி, இவரது டூவீலர் மீது மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவலறிந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து குஜிலியம்பாறை போலீசார், லாரி டிரைவரான கரூர் சேங்கலைச் சேர்ந்த கிருஷ்ணன்(44) என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரண நடத்தி வருகின்றனர்.