நத்தம், ஆக. 9: மதுரை மாவட்டம் கருங்காலக்குடிதேன் குடிப்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் (26). இவர் சம்பவத்தன்று தனது டூவீலரில் கருங்காலக்குடியிலிருந்து நத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தார். சம்பைப்பட்டி பிரிவு அருகே வந்த போது முன்னால் சென்ற டிராக்டர் மீது டூவீலர் மோதியது.
இதில் படுகாயமடைந்த பாலமுருகனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்கா நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பாலமுருகன் உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.