திண்டுக்கல், அக். 8: சட்டீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் 30வது தேசிய பெண்கள் கால்பந்து போட்டி இறுதிச்சுற்று நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு அணி மிகவும் சிறப்பாக விளையாடி கோவா அணியை 5:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு அணியின் பிரியதர்ஷினி 3 கோல்களும், செரோன் மற்றும் வினோதினி தலா ஒரு கோல் அடித்து அணியை வெற்றி பெற செய்தனர். இத்தகவலை கால்பந்து கழக செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
+
Advertisement