Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரெட்டியார்சத்திரம் அம்மாபட்டியில் மக்கள் ஆர்வமுடன் மனுக்கள் அளிப்பு

ரெட்டியார்சத்திரம், நவ. 1: ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் அம்மாபட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். தொடர்ந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் அந்தந்த துறை அலுவலர்களால் உடனுக்குடன் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

பின்னர் சிலரது மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டு அதற்கான சான்றிதழ்கள் பயனாளிகளிடம் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (சத்துணவு) பழனிச்சாமி, பிரபாகரன், ஆர்த்திபா, வரதராஜன், வருவாய் ஆய்வாளர் கண்ணன், ஒன்றிய பணியாளர் சிவமுருகன் மற்றும் துறை அலுவலர்கள்- பணியாளர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் ராகவன் நன்றி கூறினார்.