Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காற்றாலையில் வடமாநில வாலிபர் தற்கொலை

பழநி, அக். 29: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிக்நா மாஞ்சி மகன் செசாதேவ மாஞ்சி (18). இவர் குடும்பத்துடன் பழநி அருகே ராஜாம்பட்டியில் உள்ள செங்கல் சேம்பரில் தங்கி பணிபுரிந்து வந்தார். தந்தை பிக்நா மாஞ்சி குடிப்பழக்கம் உள்ளவர் என கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு தனது மகனை அடிப்பதும், கூலிப்பணத்தை பிடுங்கி செல்வதுமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செசாதேவ மாஞ்சி நேற்று முன்தினம் தான் பணிபுரிந்த செங்கல் சேம்பரின் அருகில் உள்ள காற்றாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.