Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேடசந்தூரில் பருவமழையை எதிர்கொள்ள நெடுஞ்சாலை துறை தயார்

வடமதுரை அக். 25: தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை துவங்கி வெளுத்து வாங்கி வருகிறது. இதனை எதிர்கொள்ள நெடுஞ்சாலை துறையினர் தயார் நிலையில் இருக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் நெடுஞ்சாலை துறையினர் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் தயார் நிலையில் இருந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வேடசந்தூர் தாலுகாவில் வடகிழக்கு பருவமழையால் சாலைகள், பாலங்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலை துறையினர் தயார் நிலையில் உள்ளனர். உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் மண் மூட்டைகள், மரம் அறுக்கும் எந்திரங்கள், ஜெனரேட்டர், மண்வெட்டி, கோடாரி, அரிவாள் கயிறு உள்ளிட்ட பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. இதனை உதவி கோட்ட பொறியாளர் ராஜன் நேரில் ஆய்வு செய்தார். உடன் உதவி பொறியாளர் தினேஷ் பாபு, சாலை ஆய்வாளர்கள் இன்பராஜ், அரியநாயகி மற்றும் சாலை பணியாளர்கள் இருந்தனர்.