வடமதுரை, அக். 25: வேடசந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், வழக்கறிஞர்களுக்கு தனி பாதுகாப்பு சட்டம் உருவாக்க கோரியும் கோஷமிட்டனர். இதில் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement
