திண்டுக்கல், செப். 23: திண்டுக்கல் நல்லாம்பட்டி அருகே கண்ணார்பட்டியை சேர்ந்தவர் மலையாண்டி (72). கூலித்தொழிலாளி. இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டதால் வேலைக்கு செல்ல முடியவில்லை.இதனால் பொருளாதாரத்துக்கு மிகவும் சிரமப்பட்டு மன உளைச்சலில் இருந்த மலையாண்டி கடந்த 16ம் தேதி அவரது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த மலையாண்டி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்
+
Advertisement