நத்தம், டிச.6: நத்தம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் வருபவர் நாகராணி (59). இவர் கடந்த 23ம் தேதி கழிவறைக்கு சென்ற போது, அங்கு எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்ததில் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement

