Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரூ. 47 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

அரூர், ஆக.29: அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், வாரந்தோறும் புதன்கிழமை அன்று கால்நடை சந்தை நடைபெற்று வருகிறது. இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடு, எருமை மாடு, இறைச்சி மாடு, நாட்டுக்கோழி மற்றும் சேவல் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். வெளிமாநில மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேந்த வியாபாரிகள், கால்நடைகளை வாங்க வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில், ஒரு மாடு ரூ.4,500 முதல் ரூ.44,000 வரையும், ஆடு ரூ.4,500 முதல் ரூ.12,500 வரை என விற்பனையானது. நேற்று நடந்த சந்தையில், மொத்தம் ரூ.47 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.