காரிமங்கலம், செப்.24: காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில், சுமார் 400 ஆடுகள், 500 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், ரூ.30 லட்சத்திற்கு ஆடுகளும், ரூ.40 லட்சத்துக்கு மாடுகள் விற்பனையானது. நாட்டுக்கோழிகள் ரூ.3 லட்சத்திற்கு விற்பனையானது. கடந்த வாரத்தை காட்டிலும், கால்நடை வரத்து மற்றும் விற்பனை குறைந்து காணப்பட்டது. புரட்டாசி மாதம் காரணமாக கால்நடை விற்பனை மந்தமாக இருந்ததாகவும், வரும் வாரங்களிலும் இதே நிலை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
+
Advertisement