தர்மபுரி, அக்.17: தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி சாத்தாரமுட்டுலு பகுதியைச் சேர்ந்தவர் மல்லன். இவரது மகன் மாதேஷ் (28). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. கடந்த 3 நாட்களுககு முன், கடைக்கு செல்வதாக கூறி சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றின் அருகே மாதேஷின் டூவீலர் மற்றும் செல்போன் இருந்தது. இதுபற்றி மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடம் வந்த போலீசார் மற்றும் பாலக்கோடு தீயணைப்பு துறையினர் கிணற்றில் மாதேசை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கிணற்றில் அவரை சடலமாக மீட்டனர். அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
+
Advertisement