தர்மபுரி, அக்.17: தர்மபுரி அடுத்த பழைய தர்மபுரி அருகே, கிருஷ்ணகிரி-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் மோதி 50 வயது தொழிலாளி, உடல் நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அவ்வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடம் வந்த டவுன் போலீசார், பலியானவர் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து சடலமாக மீட்கப்பட்டவர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement