காரிமங்கலம், செப். 17: காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், தங்களது பல்வேறு கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில், சுமார் 500 ஆடுகள் 400 மாடுகளை விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், ரூ.35 லட்சத்திற்கு ஆடுகளும், ரூ.37லட்சத்திற்கு மாடுகளும் விற்பனையானது. நாட்டுக்கோழிகள் ரூ.3லட்சத்திற்கு விற்பனையானது. கடந்த வாரத்தை காட்டிலும், கால்நடை வரத்து மற்றும் விற்பனை குறைந்து காணப்பட்டது. இன்று (17ம் தேதி) புரட்டாசி மாதம் பிறப்பதால், கால்நடை விற்பனை மந்த கதியில் இருந்ததாகவும், வரும் வாரங்களிலும் இதே நிலை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
+
Advertisement