Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நிதி நிறுவன ஊழியர் உள்பட 3 பேர் மாயம்

தர்மபுரி, நவ.12: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் ஈசல்பட்டி சாமியார் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (55), விவசாயி. இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். நேற்று முன்தினம் காலை, வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்ைல. இதுகுறித்த புகாரின் பேரில், தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதே போல், அரூர் கந்தமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (30). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி செண்பகம், 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக பணம் வசூல் செய்வது தொடர்பாக மன வருத்தத்தில் இருந்துள்ளார். கடந்த 7ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காரிமங்கலம் மோதூர் மேக்னாம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(72). இவர் கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து, அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.