தர்மபுரி, செப். 11: சங்கடஹர சதுர்த்தியையொட்டி, தர்மபுரி நகரில் பிரசித்தி பெற்ற சாலை விநாயகர் கோயிலில் நேற்று மூலவருக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து சுவாமிக்கு முத்தங்கி அலங்காரம் சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் சுவாமி திருவீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல், குமாரசாமிப்பேட்டை சிவசக்தி விநாயகர் கோயில், செல்வகணபதி கோயில், நெசவாளர் நகர் விநாயகர் கோயில், அன்னசாகரம் விநாயகர்-சிவசுப்பிரமணியசாமி கோயில் உள்ளிட்ட அனைத்து விநாயகர் கோயில்களிலும், சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
+
Advertisement