பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 7: பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடியில் நேற்று வெற்றிலை வார சந்தை நடந்தது. இதில், தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி, காங்கேயம், அரூர், சேலம் உள்ளிட்ட பகுதிகள் சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்தனர். சந்தையில், பொம்மிடி, கே.என்.புதூர், கொமத்தம்பட்டி, முத்தம்பட்டி, கேத்துரெட்டிப்பட்டி, தாளநத்தம், அய்யம்பட்டி, காவேரிபுரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வெற்றிலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், 128 கட்டுகளை கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை கடந்த வாரம் ரூ.4,000 முதல் ரூ.16,000 வரை விற்பனையானது. நேற்றும் ரூ.4,000 முதல் ரூ.16,000 வரை விற்பனையானது. இதில் மொத்தம் 250 மூட்ைட வெற்றிலை ரூ.30லட்சத்திற்கு விற்பனையானதாக வியாபாரிகள் கூறினர்.
+
Advertisement

