அரூர், அக்.7: அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் தரணிதர், அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, சாமியாபுரம் கூட் ரோடு, மஞ்சவாடி கணவாய் ஆகிய இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். கடந்த மாதம் 440 வாகனங்கள் தணிக்கை செய்யப் பட்டது. அப்போது ஆம்னி பஸ், சரக்கு வாகனத்தில் ஆட்கள் ஏற்றி வந்தது, உரிய அனுமதியின்றி அதிக பாரம் ஏற்றி வண்டிகள், அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பொருத்திய வாகனங்கள் உள்ளிட்ட 103 வாகனங்களுக்கு வரி ரூ.4 லட்சத்து 96 ஆயிரம் அபராதம், ரூ.3 லட்சத்து 74 ஆயிரம் இணக்க கட்டணம் என மொத்தம் ரூ.8 லட்சத்து 70 ஆயிரம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை செய்து அனுப்பினர். முறையான ஆவணம் இல்லாத 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் தரணிதர் கூறுகையில், ‘டூவீலர் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்தக் கூடாது. கடடாயம் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டவேண்டும். வாகனத்தின் முன் மற்றும் பின் புறத்தில் பம்பர் இருந்தால், அவற்றை உடடியாக அகற்றிட வேண்டும்’ என்றார்.
+
Advertisement