காட்டுமன்னார்கோவில், அக். 30: காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள மா.அரசூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கதுரை(32), விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மணிமேகலை (26) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் இவருக்கு கடன் சுமை அதிகமானதால் அளவுக்கு அதிகமாக மது பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் கணவன், மனைவி இடையே தினந்தோறும் தகராறு நடந்துள்ளது. இந்நிலையில் தங்கதுரை, வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து மயக்கம் அடைந்தார். வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி மணிமேகலை அளித்த புகாரின்பேரில், குமராட்சி காவல் ஆய்வாளர் தேவேந்திரன், உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement
