Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடலூரில் கடல் சீற்றம்

கடலூர், நவ. 29: புயல் சின்னம் எதிரொலியாக கடலூரில் கடல் சீற்றமாக காணப்படுவதால், தேவனாம்பட்டினத்தில் கடல் நீர் உட் புகுந்தது. இதனால் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் இன்று அதிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் நாளை மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. கடல் அலைகள் வழக்கத்தைவிட உயரமான அளவுக்கு எழும்பி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு கடலூர் தேவனாம்பட்டினத்தில் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் கடல் நீர் உட்புகுந்தது. இதன் காரணமாக தேவனாம்பட்டினத்தில் கடைகள் வைத்திருக்கும் இடத்திலும் கடல் நீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் பகுதியில் பேரி கார்டுகள் வைத்துள்ளனர் மேலும் பொதுமக்கள் சில்வர் பீச்சுக்கு செல்லவும் தடை விதித்துள்ளனர். மேலும் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.