மேல்மலையனூர், நவ. 26: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த சாத்துபுத்தூர் கிராமத்தில கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரி பகுதியில் நேற்று சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலம் கிடந்தது. அங்கு துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியில் ஆடு மேய்த்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுகுறித்து மேல்மலையனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் முட்புதரில் கிடந்த மூதாட்டி சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார், உடல் நலம் பாதித்து உயிரிழந்தரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்குவாரி பகுதியில் மூதாட்டி சடலம் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
+
Advertisement


