Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கருவேப்பிலங்குறிச்சி அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் வாலிபர் சடலம் கொலையா? போலீசார் விசாரணை

விருத்தாசலம், செப். 24: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசங்கு மகன் ராமராஜன்(19). இவர் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி வாகனத்தில் கிளீனராக பணிபுரிந்து வந்தார். குடும்ப பிரச்னையின் காரணமாக பெற்றோர் வெளியூரில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வந்த நிலையில் ராமராஜன் மட்டும் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை உறவினர் ஒருவர் ராமராஜன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் ராமராஜன் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த உறவினர் கத்தி, கூச்சல் போட்டதை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சென்று ராமராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவரது தந்தை தனசங்கு, தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து ராமராஜன் பின்புறம் கைகள் கட்டிய நிலையில் தூக்கில் தொங்கியதால் அவரை யாரேனும் அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.