Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மதுவில் களைக்கொல்லி மருந்து கலந்து குடித்து விவசாயி சாவு

புவனகிரி, ஆக. 12: பரங்கிப்பேட்டை அருகே உள்ள பு.மடுவங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன்(52). விவசாயியான இவர் கடந்த 25ம் தேதி களைக்கொல்லி மருந்தை மதுவில் கலந்து குடித்துள்ளார். அதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிதம்பரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் அது பலனின்றி சௌந்தர்ராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி அளித்த புகாரின்பேரில் கிள்ளை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.