பண்ருட்டி, நவ. 11: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள சேடப்பாளையத்தை சேர்ந்தவர் அஜய் (20). இவர் தற்போது நெல்லிக்குப்பம் ரத்தினம் பிள்ளை தெருவில் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த ஜூலை மாதம் நெல்லிக்குப்பம் அங்காளம்மன் கோயிலில் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவரும் தனியாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் இருந்து வந்த தகவலின்பேரில் பண்ருட்டி மகளிர் போலீசார், அஜய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement

