Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பெண்ணை பாட்டிலால் வயிற்றில் குத்தியவர் கைது

விருத்தாசலம், அக். 11: விருத்தாசலம் அருகே உள்ள எருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சடையன் மனைவி செல்வி(40). இவரும், இவரது தந்தை கலியபெருமாள் (70) என்பவரும் சம்பவத்தன்று எருமனூர் அரசு உயர்நிலைப் பள்ளி அருகில் மழைக்காக ஒதுங்கி நின்றனர். அப்போது அங்கு படுத்திருந்த அதே பகுதியை சேர்ந்த ரவி மகன் ராகுல், செல்வராஜ் மகன் பிரவீன் (22) ஆகியோர் உங்களுக்கு இங்கு என்ன வேலை என கேட்டு அசிங்கமாக திட்டி கலியபெருமாளை தாக்கியுள்ளனர். இதனை செல்வி தடுத்தபோது செல்வியை, பாட்டிலை உடைத்து வயிற்றில் குத்தியுள்ளனர். இதில் காயமடைந்த செல்வி, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து செல்வி கொடுத்த புகாரின் பேரில் ராகுல், பிரவீன் ஆகிய இருவர் மீதும் விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து, அதில் பிரவீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.